Friday 11 November, 2011

திருவண்ணாமலையும் சுந்தரமுர்த்தி நாயனாரும் (2)

அடுத்து நாம் பார்க்கப்போவது சம்பந்தருக்கு முத்துச்சிவிகை, மணிக்குடை, பொற்சின்னம்  எல்லாம் இறைவன் வழங்கிய இடம்.

பெண்ணாகடம் அருகே இப்போது திருவட்டுரை என்று வழங்கப்படும் திருநெல்வாயில் அரத்துறை

இங்கே சுந்தரர் பாடிய பாடல் இதோ:

மாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான், மலர் மேலவன்,
நேடியும் காண்பு அறியாய்!
நீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை 
நின்மலனே!
வாண் ஆர் நுதலார் வலைப்பட்டு, அடியேன், பலவின் கனி ஈஅது

போல்வதன் முன்,
ஆணோடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவத!
ஒரு சூழல் சொல் 

இப்பாடலில் வாமன உரு எடுத்து உலகினை ஒரு அடியால் அளந்த மகாவிஷ்ணுவும், மலர் மேல் அமரும் பிரமனும், அடிமுடி தேடியும் காணமுடியாத, நீண்ட முடியினை உடைய தேவர்கள் வந்து வணங்கும் நெல்வாயில் அரத்துறை இறைவனே! ஒளி பொருந்திய நெற்றியை உடைய 
மாந்தரின் மையலாகிய வலையில் வீழ்ந்து பலாப்பழத்தில் அகப்பட்ட ஈயைபோல் நான் அழிவதற்குள் அவர் மையலில் இருந்து  நான் பிழைத்து போக ஒரு வழியை சொல் என்று திருவண்ணாமலையில் அவர் காட்டிய கோலத்தை குறித்து  பாடுகிறார். 


இத்தலத்தில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் பதிகம் பாடியுள்ளனர்.


2 comments:

  1. Nice article. enjoyed reading with meaning of the pathigams. since i can't fully follow the language of pathigams/devarams in toto, your narration in simple language is a boon. keep it up
    vidyasagar.

    ReplyDelete
  2. Thanks so much Mr Vidyasagar. Do check out the blog as this series will continue with many more interesting pathigams

    Warm regards
    Priya

    ReplyDelete